இலங்கையில் சீதைக்கு கோவில்!

சனி, 1 ஜூன் 2013 (16:39 IST)
இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும்' என, மத்திய பிரதேச மாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளது. பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறியுள்ளார். கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், கோவில் கட்டும் பணி துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்