இங்கிலாந்தின் வடக்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள கிராட்லி என்ற கிராமத்தில் பெர்ட் - பான்சிலே என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் 2 நாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள். பிறந்ததில் இருந்து ஒரே தெருவில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்த இவர்கள், 1943 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று திருமணம் செய்துகொண்டனர்.
இதனையடுத்து இவர்கள் மணமுடித்த தேவாலயத்திலேயே இறுதிசடங்கும் நடைபெற்றது. இவர்களது 70 வருட திருமண வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில், இவர்களின் இறுதி சடங்கின் போது திருமணத்திற்கு இசைக்கப்படும் 'வெட்டிங் பெல்ஸ்' இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.