அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: பாக். எச்சரிக்கை

திங்கள், 12 டிசம்பர் 2011 (13:28 IST)
அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு புதிய இராணுவ கொள்கையை வகுத்துள்ளதை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அதிகாரம் வழங்கபட்டு உள்ளது.

இதுகுறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,"எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்