வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தாள் 3வது சிறுமி, உடனே 2 வயது சிறுவன் அது தனக்கும் வேண்டும் என்று கேட்டு சண்டை நடந்துள்ளது. ஒருவருக்கொருவர் பறிக்க நினைத்தபோது சிறுமியின் கையில் இருந்த கைத்துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்தது.
துப்பாக்கி குண்டு சிறுவனின் உடலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த தாயார் குண்டடிப்பட்டு மயங்கி கிடந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை நடந்தது. இருந்தும் அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்த மாதத்தில் மட்டும் இது போன்று 4 சம்பவங்கள் நடந்துள்ளன.