கருவுற்ற காலத்தில் பெண்கள் குடிப்பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது குழந்தைகளுக்கு பார்வைக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் குடிப்பழக்கம் உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வைக் கோளாறு, கவனச் சிதறல், திடீர் மன உந்துதலால் மேற்கொள்ளும் செயல்கள் ஆகியவற்றிற்கு உள்ள தொடர்புகள் முந்தைய பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும், இந்த புதிய ஆய்வு முடிவுக்கான ஆதாரங்களின் உறுதித் தன்மை குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. குடும்ப பழக்க வழக்கங்கள், மரபணு காரணிகளுக்கும் கர்ப்ப கால குடிப்பழக்கத்திற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே கருவுற்ற காலத்தில் பெண்கள் குடிப்பதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.