மறைமுக வரி வருவாய் 14 விழுக்காடு உயர்வு!

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கலால் வரி (உற்பத்தி வரி) ரூ.10,293 கோடி வசூலாகி உள்ளது. இது சென்ற வருடம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.6 விழுக்காடு உயர்வு.
சென்ற வருடம் அக்டோபரில் கலால் வரியாக ரூ.9,066 கோடி வசூலானது.

அக்டோபர் மாதத்தில் சுங்க வரி (ஏற்றுமதி இறக்குமதி வரி ) ரூ.9,353 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற அக்டோபரில் வசூலானதை விட 25 விழுக்காடு அதிகம். சென்ற அக்டோபரில் சுங்க வரி ரூ.7,503 கோடி வசூலானது.

இந்த நிதியாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதத்தில் சுங்க வரியாக ரூ.57 ஆயிரத்து 833 கோடியும், கலால் வரியாக ரூ.64 ஆயிரத்து 948 கோடியும் வசூலாகியுள்ளது. இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 781 கோடி வசூலாகியுள்ளது.

இந்த மத்திய நிதி நிலை அறிக்கையின் (பட்ஜெட்) மதிப்பீட்டின் படி முதல் ஏழு மாதங்களில் கலால் வரி 50 விழுக்காடும், சுங்க வரி 59 விழுக்காடும் வசூலாகியுள்ளது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதத்தில் சேவை வரியாக ரூ.21 ஆயிரத்து 891 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற வருடத்தின் ஆறு மாதத்தை விட 36.8 விழுக்காடு உயர்வு. சென்ற வருடம் முதல் ஆறு மாதத்தில் சேவை வரியாக ரூ.15 ஆயிரத்து 997 கோடி வசூலாகி இருந்தது.


வெப்துனியாவைப் படிக்கவும்