தமிழக சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு செய்ய வேணடும் என்று தேர்தல் ஆணையம் போராடி வருகிறது. இதற்காக திரையுலக பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்வதோடு, பிரபல சினிமா வசனங்களை மாற்றியமைத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், மே-16ஆம் தேதி ஓட்டுப் போடுவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது அடையாளம் கொள்ளுங்கள், அவன் தான் வருங்கால திருடன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.