கர்ணன் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

செவ்வாய், 2 மார்ச் 2021 (07:15 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜி தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தானு படத்தின் வியாபார வேலைகளை மும்முரமாக தொடங்கியுள்ளார். படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்ற பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நிகழ்ந்த நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சி மிகப்பெரும் தொகைக் கொடுத்து கைப்பற்றியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்