யட்சன் - கதையை படிச்சிட்டு படத்துக்கு போங்க

வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (14:29 IST)
ஆனந்த விகடனில் சுபா தொடராக எழுதிய கதையைத்தான் சினிமாவுக்காக சற்று மாற்றி யட்சன் என எடுத்துள்ளார், விஷ்ணுவர்தன்.


 

 
படம் இன்று திரைக்கு வந்திருக்கும் நிலையில், யட்சன் கதைப் புத்தகத்தையும் இன்று வெளியிடுகிறார்கள்.
 
இதற்குமுன் பல நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. ஆனால், இதுவரை படம் வெளியாகும் அன்று அதன் புத்தகத்தையும் வெளியிட்டதில்லை.
 
முதல்முறையாக அப்படியொரு அனுபவத்தையும் ரசிகர்களுக்கு தந்திருக்கிறது யட்சன் படக்குழு.
 
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் ஆர்யா புத்தகத்தை வெளியிட கிருஷ்ணா பெற்றுக் கொள்கிறார். சுபா பப்ளிகேஷன்ஸ் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்