சார்பட்டா பரம்பரை 2 அறிவிப்பு… சண்டையை மறந்து மீண்டும் சந்தோஷ் நாராயணனுடன் இணைவாரா ரஞ்சித்?

செவ்வாய், 7 மார்ச் 2023 (09:56 IST)
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்- இசையமைப்பாளர் வெற்றிக் கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த கூட்டணி பா ரஞ்சித்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி. இவர்கள் இணைந்து உருவாக்கிய அனைத்துப் படங்களின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஆனால் சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. கடைசியாக அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்துக்கு தென்மா இசையமைப்பாளராக பணியாற்றினார். இந்நிலையில் விக்ரம் 61 படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தோஷ் நாராயணனுடனான பிரிவு குறித்து முன்னர் பேசிய பா ரஞ்சித்  “நாங்கள் இருவருமே இணைந்து எடுத்த முடிவுதான். மீண்டும் நாங்கள் இணைந்து பணியாற்றவே மாட்டோம் என்றில்லை. நான் அழைத்தால் அவர் வந்துவிடுவார் என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு நாங்கள் ஒன்றும் சண்டை போட்டுக்கொள்ளவில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் கூட்டணியின் கடைசி படமாக அமைந்த சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பா ரஞ்சித் ஆர்யா தவிர வேறு எந்த கலைஞர்களின் பெயரும் அறிவிக்கப்படவில்லை. இதனால் முதல் பாகத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், இரண்டாம் பாகத்துக்கும் இசை அமைப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்