முரண்டு பிடிக்கும் த்ரிஷா…. இதுதான் காரணமாம்!

புதன், 14 ஏப்ரல் 2021 (15:52 IST)
தான் நடித்துள்ள படத்துக்கே ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரமாட்டேன் என திரிஷா முரண்டு பிடித்து வருகிறார்.

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு பிப்ரவரி 28 என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் புரமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக படம் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது.

இந்நிலையில் படத்தைத் தயாரித்த 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை ஓடிடி வெளியீடாகக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் படத்தின் நாயகியான திரிஷா நடிக்க மறுத்து வருகிறாராம். இது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் த்ரிஷா நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தடை விதிக்கும் ஆலோசனையில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வழக்கமாக விளம்பரப் பணிகளில் ஆர்வமாக கலந்துகொள்பவர்தான் த்ரிஷா. ஆனால் இந்த படத்தை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக எடுப்பதாக சொல்லிதான் ஆரம்பித்து இடையில் மற்றொரு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரிஷா கதாபாத்திரத்தை டம்மி ஆக்கி விட்டார்களாம். அந்த கோபத்தில்தான் திரிஷா விளம்பரங்களுக்கு வர மறுக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்