சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தற்போது இலங்கையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிய கதைக்களத்தை எதற்காக இலங்கையில் படமாக்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கானக் காரணம் என்னவென்றால் படத்தில் நீராவி எஞ்சின் ரயில் சம்மந்தமான முக்கியமானக் காட்சிகளை இலங்கையில் படமாக்குகிறார்களாம். இலங்கையில் தற்போதும் நீராவி எஞ்சின் ரயில் இயங்குவதால் அங்கு படம்பிடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.