பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக முதலில் பாடகி சுசித்ரா ட்வீட் செய்தார். பின்னர் நடிகர், நடிகைகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனிடையே அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது என தகவல் வெளியானது.
ஆனால் அவர் தரப்பில் இருந்து முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவரது கணவர் சுசித்ரா மனநிலை சரியில்லாமல் உள்ளார், எனவே அவருடைய பதிவுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டாம் என கூறினார். இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய சுசித்ரா, தான் நல்ல மனநிலையுடன் உள்ளதாகவும், எனது கணவர் எதுவும் கூறவில்லை என்றும், தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
சுசித்ராதான் தனது பக்கத்தில் அனைத்தும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள பதிவு செய்தாரா? உண்மையிலே அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? அவரது கணவர் கூறியது போல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா? போன்ற கேள்விகள் அனைத்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எது உண்மை என்று தெரியவில்லை. வெளிவரும் அனைத்தும் வெளியாகியுள்ளது என்ற பெயரில் பரவி வருகிறது குறிப்பித்தக்கது.