கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் முதல் பேட்டி

செவ்வாய், 8 அக்டோபர் 2019 (19:23 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லாஸ்லியா. இவரை கோலிவுட் திரையுலகம் சிறப்பாக வரவேற்க காத்திருக்கின்றது. கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்திலும் ‘ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் லாஸ்லியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியா, தந்தையின் கண்டிப்புக்கு பின்னரும் காதலை கைவிடாமல் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து லாஸ்லியா அளித்த முதல் பேட்டியில், ‘எனது அப்பா மிகவும் பாசமானவர். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள். எனவே காதல் திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் எனது திருமணம் நடக்கும். என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்’ என்று கூற்னார். கவின், லாஸ்லியா திருமணம் நடக்குமா? இருதரப்பு பெற்றோர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்