சூரி மூலமாக சம்பாதித்து சாப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! விஷ்ணு விஷால் பதில்!

செவ்வாய், 23 மார்ச் 2021 (10:17 IST)
சமீபத்தில் காடன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் சூரிக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வரவேற்பைப் பெற்ற கதாநாயகன் நகைச்சுவை நடிகர் காம்போவில் விஷ்ணு விஷாலும், சூரியும் இருந்து வந்தனர். இவர்கள் சேர்ந்து நடித்த படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு எழும் விதமாக சூரி காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார்.

அதில் நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் தயாரிப்பாளர் அன்பு வேலவன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக கூறியிருந்தார். ஆனால் அதை மறுத்த விஷ்ணு விஷால் தன் தந்தை குற்றமற்றவர் என சமூகவலைதளங்களில் கூறி வந்தார். இந்த வழக்கின் விசாரணை இப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த காடன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷ்ணு விஷாலிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குபதிலளிக்கையில் ‘இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் என்னால் அதிகமாக பேசமுடியாது. ஆனால் நிலம் சம்மந்தப்பட்ட புகாரில் எனக்கும் என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். என்னால் புகாரின் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் அளிக்கமுடியும். ஆனால் பின்னர் சூரியின் இருண்ட பக்கங்களை விளக்க வேண்டி இருக்கும். அதன அல் எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சில ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையின் காலில் விழுந்து வணங்கி நீங்கள் தான் என்னுடைய கடவுள்' என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார். சூரி மூலம் சம்பாதித்து சாப்பிடவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்