தமிழகத்தில் வசித்துக் கொண்டு, தமிழ்ப் படங்களில் நடித்துச் சம்பாதிக்கும் விஷால், தமிழ்க் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தக் கருத்தைக் கூறியது, தமிழ்ச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல். அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில், விஷாலின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நடத்துவோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.