சூரி ஹீரோவாக நடிக்க விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம்… தயாரிப்பாளர் இவர்தான்!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (16:31 IST)
மதயானைக் கூட்டம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழிந்த  நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார்.

சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் இந்த படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறாராம்.மேலும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்