இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவை பெயராக வைத்திருப்பதற்கு காரணம் உண்டு. இது இந்திய இளைஞனுக்கும் பாகிஸ்தான் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதை. விக்ரம் பிரபு இந்திய இளைஞனாக வருகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணாக இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் யார் என்பதை படயூனிட் ரகசியமாக வைத்துள்ளது.
காரைக்குடியில் தற்போது பாடல் காட்சியை எடுத்து வருகின்றனர். அது முடிந்த பிறகு அடுத்த மாதம் குலுமணாலி செல்கின்றனர். மொத்தம் 55 நாள்கள் தொடர் படப்பிடிப்பு. சிறப்பு அனுமதி வாங்கி வாகா எல்ஙலைப் பகுதியில் சில காட்சிகளை படமாக்க உள்ளனர். விக்ரம் பிரபு நடித்துள்ள இது என்ன மாயம் வெளியான பிறகு படம் குறித்த பிற தகவல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.