திருச்சி ரவுடியிசத்தின் பின்னணியில் தயாரான சத்ரியன்

திங்கள், 6 பிப்ரவரி 2017 (16:02 IST)
விக்ரம் பிரபுவின் அடுத்த வெளியீடு, சத்ரியன். முடிசூடா மன்னன் என்றுதான் இந்தப் படத்துக்கு முதலில் பெயர் வைத்திருந்தனர். அதே பெயரில் வேறெnருவர் பெயர் பதிவு செய்திருந்ததால் சத்ரியன் என்று பெயரை மாற்றினர்.



சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஆக்ஷன் பின்னணியில் இந்தப் படம் தயாராகியுள்ளது. படத்தின் முக்கிய சுவாரஸியம். திருச்சி ரவுடியிச பின்னணியில் இப்படம் தயாராகியுள்ளது.

பொதுவாக ரவுடி என்றால் மதுரை அல்லது சென்னை. முதல்முறையாக திருச்சி பகுதியின் ரவுடியிசத்தை பதிவு செய்துள்ளாராம். இதற்காக திருச்சியின் முக்கிய ரவுடிகளிடம் நெருங்கிப் பழகி காட்சிகளை அமைத்ததாக இவர் கூறுகிறார்.

படத்தில் அரிவாள் வெட்டு விழும் போது  மூஞ்சியில் ரத்தம் தெறிக்குமோ?
 

வெப்துனியாவைப் படிக்கவும்