வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்த விக்ரம்: ரசிகர்கள் பாராட்டு!

வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:04 IST)
தனது வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்த பெண்ணுக்கு பெசன்ட் நகரில் சொந்த வீடு விக்ரம் வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
விக்ரம் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்த மேரி என்ற பெண்ணின் மகன் திருமணத்தை விக்ரம் சமீபத்தில் நடத்தி வைத்தார் என்பது தெரிந்ததே. திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு விக்ரம் நேரடியாக சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் 
 
அதுமட்டுமின்றி மணமகன் சார்பில் உள்ள அனைத்து செலவுகளையும் அவர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை பெசன்ட் நகரில் பல லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி மணமக்களுக்கு பரிசாக அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் விக்ரம் ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்