சூர்யாவின் விருப்பம், நிறைவேற்றுவாரா விஜய்?

வெள்ளி, 30 ஜனவரி 2015 (10:52 IST)
எஸ்.ஜே.சூர்யா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் இசை இன்று வெளியாகியுள்ளது. வாலி, குஷி என்று பிரமாண்ட வெற்றிகளை தந்தவர், தானே ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையால் சின்ன சறுக்கல்களை சந்தித்து இசை மூலம் மீண்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்களை விஜய் வெளியிட்டார். அப்போதே, விஜய்யை சூர்யா இயக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் விஜய்யை இயக்கும் ஆசையை சூர்யாவே வெளியிட்டார்.
 
நான் விஜய்யை வைத்து குஷியை இயக்கி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்படியிருந்தும் இசை பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டார். அவரை மீண்டும் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்றார்.
 
சூர்யாவின் ஆசையை விஜய் நிறைவேற்றுவாரா? 

வெப்துனியாவைப் படிக்கவும்