சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான் – தளபதி விஜய்

புதன், 9 ஆகஸ்ட் 2017 (23:09 IST)
யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.. அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்..



 
 
 யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..
 
பிரபல பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் பிரச்சனையால் கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் தெரிவித்த ஆபாசமான கருத்துக்களை அடுத்து இன்று விஜய் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்