வெளிநாட்டில் வேலை செய்த இடத்தைப் பார்த்த விஜய் சேதுபதி

புதன், 15 டிசம்பர் 2021 (19:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி துபாயின் தான் வேலை செய்த இடத்தை சென்று பார்த்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தின் 50 வது பொன்விழா துபாயில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ளச் சென்ற நடிகர் விஜய் சேதுபதி விழாவின் பேசியதாவது:

துபாய்க்கு நான் கடந்த 2000- ஆம் ஆண்டு மிகப்பெரிய லட்சியங்களுடன் வேலைக்கு வந்தேன். இங்கு வந்ததும் இந்த் நாட்டை எனது இரண்டாவது தாயகம் போல் உணர்ந்தேன்.  இங்குள்ள பர்துபாய் மற்றும் அல் பஹித் ஆகிய அசாலைகளில் நான் கனவுகளுடன் நடந்து சென்றுள்ளேன் .

மேலும் தான் சினிமாவில் நடிக்க வந்து இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளது ஒரு விபத்து என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்