அம்மா விசுவாசிகளை மிஞ்சிய விஜய் ரசிகர்கள்

திங்கள், 7 டிசம்பர் 2015 (09:31 IST)
மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவல நிலையையும் தங்களின் அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள்.


 

 
முக்கியமாக ஆளும் அதிமுக கட்சியினர், தன்னார்வலர்களால் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களையும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டியே விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
 
பல இடங்களில் அதிமுகவினர் முதல்வரின் படத்தை ஒட்டவேண்டும் என்று தகராறில் இறங்கியதும் நடந்திருக்கிறது.
 
விஜய் ரசிகர்களும் நிவாரணப் பொருள்களில் விஜய் படத்தை ஒட்டி விநியோகித்தது தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
 
மலையாள நடிகர் திலீப் லாரிகளில் தண்ணீர் பாட்டில்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.


 

 
அவரது படம் முதற்கொண்டு எதுவும் அந்த லாரிகளிலோ, தண்ணீர் பாட்டில்களிலோ இல்லை. 
 
ஆனால், விஜய் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள் முதற்கொண்டு அனைத்து நிவாரணப் பொருள்களிலும் விஜய் படத்தை ஒட்டியே விநியோகிக்கின்றனர். 
 
உதவி விஷயத்திலும் சில விஜய் ரசிகர்கள் விளம்பரம் தேடுவது விஜய்யின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவே இருக்கும் என விஜய் ரசிகர்களே வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்