விவசாயிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்...நெகிழ்ச்சி சம்பவம்...

சனி, 28 நவம்பர் 2020 (20:59 IST)
விஜய் ரசிகர்கள் விவசாயிகளிடம் கொத்துமல்லியை விலைகொடுத்து வாங்கி அதை மக்களுக்கு கொடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பருவமழை காரணமாக இதனால் வெண்டைக்காய் கொத்தமல்லி போன்றவை நல்ல விளைச்சல் இருந்தது.ஆனால்  இவற்றுக்கு நல்ல விலை இல்லாததால் அவற்றை முல்லை பெரியாற்றில் கொட்டி வந்தனர்.

இதை அறிந்த விஜய் ரசிகர் மன்றத்தினர், அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து,  அவர்களிடம் கொத்துமல்லித் தளைகளை விலைக்கு வாங்கி அவற்றை வாரச்சந்தைக்கு அனுப்பி பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்தனர்.

இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்