‘பாய்காட் ட்ரண்ட்டால் நடிகர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை’… விஜய் தேவர்கொண்டா பதில்

சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:26 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபகாலமாக பரவி வரும் பாய்காட் ட்ரண்ட் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் இந்த படத்துக்கு எதிராக வட இந்தியாவில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை அடுத்து அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி “தற்போது லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்” என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி முன்பே பேசிய அமீர்கான் “நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பாருங்கள்” எனக் கூறியிருந்தார். ஆனால் படம் அடைந்த படுதோல்விக்கு இந்த ஹேஷ்டேக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இதைப்பற்றி இப்போதுதான் நடிகர் மௌனம் கலைக்க ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இதுபற்றி “ பாய்காட் ட்ரண்ட்டால் அமீர்கான் மட்டும் பாதிக்கப்படவில்லை. அந்த படத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றியுள்ளார்கள். அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படம். அவர்களின் வேலை மற்றும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம். பாய்காட் ஏன் எதற்கு என்று தெரியவில்லை. தவறான புரிதலால் நடக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்