ரிப்போர்ட்டராக நடித்த வரலட்சுமி சரத்குமார்

வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (11:12 IST)
சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்ற இரு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘வெல்வெட் நகரம்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் மனோஜ்குமார் நடராஜன்.
ஹீரோயினை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். மாளவிகா சுந்தர், ரமேஷ்  திலக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
மதுரையில் ரிப்போர்ட்டராகப் பணிபுரியும் வரலட்சுமி, பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்காக ஆதாரம் தேடி சென்னை வருகிறார். சென்னையில் அவருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படம். 48 மணி நேரத்தில் நடக்கும் கதைதான் இந்தப் படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்