சூர்யா ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் – வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ்

திங்கள், 15 நவம்பர் 2021 (11:43 IST)
வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பாராட்டுகளும், எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன.

முக்கியமாக இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு தவறாக சித்தரித்திருப்பதாக அச்சமுதாயத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ” ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என வன்னிய சங்க தலைவர் பு.தா.அருள்மொழி என்பவர் நடிகர் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்