தூத்துகுடி எஸ்பியை சந்தித்த ’வலிமை’ இயக்குனர்: என்ன காரணம்?

புதன், 18 நவம்பர் 2020 (17:21 IST)
தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் அஜித் மீண்டும் சென்னை திரும்பிவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து மீண்டும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி எஸ்பி அவர்களை ’வலிமை’ இயக்குனர் வினோத் சந்தித்து பேசியதாகவும் ’வலிமை’ படத்தின் சில காவல்துறை நுணுக்கங்களை அவர் எஸ்பியிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது 
 
’வலிமை’ படட்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருவதை அடுத்து இந்த படத்திற்காக பல விஷயங்களை தெரிந்துகொள்ள காவல்துறை அதிகாரிகளை வினோத் கடந்த சில நாட்களாக சந்தித்து வருவதாகத் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது அவர் தூத்துக்குடி எஸ்பியை சந்தித்துள்ளதாக வெளி வந்திருக்கும் தகவலை அடுத்து அவர் முழுக்க முழுக்க இந்த படத்திற்காக மிகப்பெரிய ஆய்வு செய்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்