நாளை ரிலீஸ் ஆகவிருந்த திரைப்படம் திடீர் தள்ளிவைப்பு!

வியாழன், 5 மே 2022 (18:08 IST)
நாளை ரிலீஸ் ஆகவிருந்த திரைப்படம் திடீர் தள்ளிவைப்பு!
நாளை ரிலீசாக இருந்த திரைப்படம் திடீரென தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது 
 
நாளை அதாவது மே 6-ஆம் தேதி ரிலீசாக இருந்த திரைப்படங்களில் ஒன்றாக வாய்தா என்ற படம் இருந்தது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மகிவர்மன் என்பவர் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை வெளியாக இருந்த வாய்தா திரைப்படம் தள்ளி வைக்கப்படுகிறது என்றும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்