இந்த நடிகர் இரண்டு படத்தை இயக்கியுள்ளாரா? யாருக்கும் தெரியாத தகவல்!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:04 IST)
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கி வரும் நடிகர் மாரிமுத்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறியாத செய்தியாகும்.

தமிழில் இருக்கும் திறமையான குணச்சித்திர நடிகர்களில் மாரிமுத்துவும் ஒருவர். பரியேறும் பெருமாள் படத்தில் நடிகை கயல் ஆனந்தியின் தந்தையாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இது தவிர, கொம்பன், பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகராக அறியப்பட்ட இவரின் மற்றொரு முகம் யாரும் அறியாதது. இவர் அடிப்படையில் ஒரு இயக்குனர் பிரசன்னா நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் படம் மற்றும் விமல் பிரசன்னா நடிப்பில் உருவான புலிவால் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் நடிப்பில் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்