அடுத்தடுத்து இரண்டு படங்கள் – அசத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

செவ்வாய், 9 மே 2017 (14:39 IST)
இசையமைப்பாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தன்னுடைய அடுத்த படம் குறித்தும்  தெரிவித்துள்ளார்.

 
 
1992ஆம் ஆண்டு ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் முதற்கொண்டு பல்வேறு மொழிகளிலும் இசையமைத்து வருகிறார். 25 வருடங்களாக இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஆஸ்கர்’ முதல் பல விருதுகளை வென்றுள்ளார்.
 
சில வருடங்களாகவே இயக்குநராக விரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது ‘லீ மஸ்க்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வெளிநாட்டைச் சேர்ந்த பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது ரோமில் நடைபெற்று வருகிறது. ‘விர்ச்சுவல்  டெக்னாலஜி ரியாலிட்டி’ என்ற தொழில்நுட்பத்தில் இந்தப் படம் ஷூட் செய்யப்படுகிறது.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள், தன்னுடைய அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய நடனம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்