புலி படத்தின் பாடல்கள் நேற்று மகாபலிபுரத்தில் வெளியிடப்பட்டது. விழாவில் விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, நந்திதா, இயக்குனர் சிம்புதேவன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், தயாரிப்பாளர் தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய்யின் மனைவி சங்கீதா, இயக்குனர்கள் தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜீவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் ஹைலைட் என்றால் அது டி.ஆரின் பேச்சு. என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்பது தெரிந்தும் விஜய் உதவி செய்தார் என்று, வாலு படம் வெளிவருவதற்கு விஜய் எடுத்துக் கொண்ட முயற்சியை டி.ஆர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
டி.ஆர். உணர்ச்சியின் பெரும் ஊற்று. விஜய்யின் முயற்சிக்குப் பிறகும் கொஞ்ச நேரம் பீறிட்ட பிறகே அடங்கினார். நேற்றைய நிகழ்வை டி.ஆரின் உணர்ச்சிகரமான பேச்சு, விஜய்க்கும், பார்வையாளர்களுக்கும் மறக்க முடியாத நாளாக்கியது என்றால் மிகையில்லை.