தமிழ் மொழிக்கான தேசிய விருது பெற்ற படம் அறிவிப்பு

வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:24 IST)
இன்று 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் என செய்தி வெளியான நிலையில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர்.
 
ஆனால் சற்றுமுன் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது 'டூலெட்' என்ற படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருந்தார். 
 
இந்த படம் 30 நாட்களில் வாடகைக்கு புது வீடு தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பத்தின் சூழ்நிலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் செழியன், பாலா இயக்கிய பரதேசி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்