அரவிந்த் சாமிக்கு ஜோடியானார் ஸ்ரேயா சரண்

வியாழன், 4 மே 2017 (10:51 IST)
சிம்புவைத் தொடர்ந்து, அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா சரண்.

 
2011ஆம் ஆண்டு வெளியான ‘ரெளத்திரம்’ படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்தார் ஸ்ரேயா. அதுதான் தமிழில் அவர் கடைசியாக  நடித்தது. அதன்பிறகு ஒன்றிரண்டு படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்துபோன அவர், தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 
 
இந்நிலையில், சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்துள்ளார். அதுவும், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். தற்போது, ‘துருவங்கள் 16’ இயக்குநரின் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்  ஸ்ரேயா. அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘நரகாசூரன்’ என தலைப்பு வைத்திருக்கின்றனர். ஆகஸ்ட்  மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்