துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் மாற்றம்…. தள்ளிப்போகும் லண்டன் ஷூட்டிங்!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:01 IST)
விஷால் இயக்கி நடிக்க உள்ள துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் விஷால் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் இப்போது ஏப்ரல் மாதம்தான் அந்த படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக லத்தி உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பை விஷால் முடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்