தமிழ் சினிமா பின்தங்கியதற்கு காரணம் இதுதான்- இயக்குனர் வசந்தபாலன்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:21 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வசந்த பாலன் சினிமாவுக்கு அதிக புரிதல் கொண்ட கதாசிரியர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வசந்த பாலன்.இவர்வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், அவரான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் ஜெயில். இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து,   அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், ஒரு குறும்பட  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்தபாலன், தமிழ் சினிமாவில் இன்னும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள் மற்றும் ஸ்கிரீன் பிளே எழுத்தாளர்கள் இல்லாதது தான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இங்குள்ள தயாரிப்பாளர்கள்  கதாசிரியர்களைக் கொண்டாட வேண்டும். அதேபோல் சினிமாவில் புரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்