இது தான் கடைசி டோம் அமர்வில்- சன்னி லியோன் கூற நிகழ்ச்சி சுவாரஸ்யமானது!

J.Durai

புதன், 7 ஆகஸ்ட் 2024 (13:05 IST)
இதயங்களின் ராணி, சன்னி லியோன், MTV Splitsvilla X5: ExSqueeze Me Please இன் சமீபத்திய எபிசோடில் 'ஷேர்' ஹர்ஷை  ஆடியை  ​​சன்னி அவரை கடுமையாக கண்டிக்கிறார், "தில் கா சாஃப் தா? உங்கள் மனம் சரியில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
 
அவர் தனது காதலியுடனான தொடர்பை கைவிட விரும்பினார். ஆனால், அவர் அவளிடம் சொல்லவில்லை, வோ தில் கா சாஃப் ஹோதா ஹை? உண்மையாகவா ஹர்ஷ்?" என சன்னி லியோன் ஹர்ஷை எச்சரித்தார்.
 
எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா அதன் இறுதிப் போட்டியை நெருங்கி வருகிறது. அதன் காரணமாகவே ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை அடைந்து அனல் பறக்கிறது. சமீபத்திய எபிசோடில், அதிகம் பவர் கொண்ட சக்தி ஜோடியாக திக்விஜய் மற்றும் காஷிஷ் உள்ளனர். 
 
மேலும், காதல் ஜோடியாக ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி ஆகியோர் இனிமையான தங்களது டேட்டிங்கை பகிர்ந்து கொண்டனர். காஷிஷ் திக்விஜய்யின் மனதில் தெளிவாக ஈர்க்கப்பட்டு, அவள் இதயத்தில் நுழைந்தார்.
 
ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
 
அடுத்த நாள் காலை சவால் நடைபெறும் இடத்தில், தனுஜ் விர்வானி மற்றும் சன்னி லியோன் போட்டியாளர்களிடையே டேட்டிங் பற்றி கேட்க விரும்புகிறார்கள். காஷிஷ் அவள் விரும்பும் ஆண் குறித்து வெளிப்படுத்துகிறாள், ஆனால், அது அவளது முன்னாள் ஸ்க்வீஸ் ஆடிக்கு முரண்பாடாக உள்ளது. 
 
ஹர்ஷ் ஆடிக்காக பரிந்து பேச காட்டமாக முனையும் போது, சன்னி லியோன் ஹர்ஷின் எண்ணத்திற்கு எதிராக சவால் விடுகிறார்.
 
இறுதிச் சீட்டுக்கான இறுதிச் சவால்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டிக்கெட் டு ஃபினாலே' சவால் கடைசி டாஸ்க்கில் இருந்து வெற்றி பெறுபவர்களுக்கானது! காதல் ஜோடிக்கும் சக்தி ஜோடிக்கும் இடையிலான சவால், ஒரு ட்விஸ்ட்டுடன் ஐடியல் மேட்ச்சையும் போட்டியில் ஈடுபடுத்துகிறது. இந்த போட்டியில், ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி, திக்விஜய் மற்றும் காஷிஷ், மற்றும் சிவெட் மற்றும் அனிக்கா உள்ளிட்டோர் மோத வேண்டும். 
 
இதில், வெற்றி பெறுபவர்கள் ‘டிக்கெட் டு ஃபினாலே’வை அடைவார்கள்.
 
இந்த சவாலில், ஜோடிகள் ஒன்றாக ஒரு தேடலில் ஈடுபடுவார்கள். முதலில், இதய வடிவிலான மேஸை கடக்கும்போது, ஆண் போட்டியாளர்கள் கண்களை மூடிக்கொண்டு, அவர்களின் கைகளில் தங்கள் ஜோடியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். பெண்கள் தங்கள் ஆண் ஜோடிக்கு வழி சொல்லி அந்த புதிரை கடக்க வேண்டும். 
 
அடுத்தது ஒரு ரிங் டாஸ்க்கையும் அவர்கள் ஒருங்கிணைத்து ஒன்றாக முன்னேறி கடக்க வேண்டும். இறுதியாக, அவர்கள் 'டிக்கெட் டு ஃபினாலேவுக்கு' நெருங்கி வர எதிரிகளை எதிர்த்துப் போராடி, தங்கள் வெற்றியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது ஒருங்கிணைப்பு, தொடர்பு மற்றும் அவர்களின் இணைப்புகளின் வலிமை ஆகியவற்றிற்கான சோதனையாகும்.
 
இந்தச் சவாலின் வெற்றியாளர் 'டிக்கெட் டு ஃபினாலே' வெற்றியாளர் என கடைசி டோம் அமர்வில் அறிவிக்கப்படுவார்.
 
உர்ஃபி ஜாவேத்தின் இறுதி தந்திரம்: மிஸ்சீஃப் மேக்கரான உர்ஃபி ஜாவேத் கடைசி டோம் அமர்வில் பெரும் குழப்பத்தை உருவாக்க அசத்தலாக என்ட்ரி கொடுத்து விட்டார். அனைவரையும் பாதுகாப்பற்ற பக்கத்தில் கொண்டு சென்று விளையாட்டை அசைக்க பார்க்கிறார். அவர் 'காட்டில் கோன்?' விளையாட்டை அறிமுகப்படுத்துகிறார். திருடன் போலீஸ் துண்டுச் சீட்டு விளையாட்டுப் போல ஒரு விளையாட்டை அரங்கேற்றுகிறார். ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சீட்டைப் பெறுகிறார்கள், ஆனால் ஒருவர் மட்டுமே 'காட்டில்' என்று கூறுகிறார். 'காட்டில்' என்றால் கில்லர் என்பது அர்த்தம். இந்த விளையாட்டின் மூலம் போட்டியாளர்களை முடக்க முயற்சிக்கிறார் உர்ஃபி ஜவேத். தேர்ந்தெடுக்கப்பட்ட Splitsvillain பாதுகாப்பாக இருக்க அவர்களின் 'காட்டில்' யார் என்பதை சரியாக யூகிக்க வேண்டும்.
 
இல்லையெனில், அவர்கள் பாதுகாப்பற்ற பகுதிக்கு செல்கின்றனர். இந்த விளையாட்டு தொடர்கிறது, இரண்டு ஜோடிகள் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் வரை ஒவ்வொரு சுற்றிலும் ஒரு போட்டியாளரை ஆபத்து மண்டலத்திற்குள் இது தள்ளும்.
 
ஒவ்வொரு சுற்றிலும், விளையாட்டு தீவிரமடைகிறது, இந்த வைல்ட் கேம் எங்கே சென்று முடியப் போகிறது என்றும் மிஸ்சீஃப் மேக்கரான உர்ஃபி ஜாவேத் என்ன செய்யப் போகிறார் என்பதையும் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது ஏராளமான வேடிக்கை மற்றும் உற்சாகத்தை உறுதிசெய்கிறது. இந்த விளையாட்டு மனதைக் கவரும் விதமாக இருக்குமா? அல்லது பரபரப்பை பற்ற வைக்கும் டிராமாவாக மாறுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்