ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம்

செவ்வாய், 25 ஜூலை 2017 (00:01 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ள பங்கேற்பாளர்களில் அதிகம் பேசப்படுவது ஓவியா மற்றும் ஜூலி ஆகிய இருவர் மட்டுமே. ஓவியாவின் உண்மையான, கள்ளங்கபடம் இல்லாத மனம் காரணமாக பாசிட்டிவ் விமர்சனங்களும், ஜூலியின் பொய்யான மற்றும் கள்ளங்கபடம் உள்ள குணம் காரணமாக நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.



 
 
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கன்பெஃக்ஷன் அறையில் ஓவியா பேசி கொண்டிருக்கும்போது தன்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் தான் அழுவதை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக அவர் கேமிராவில் இருந்து முகத்தை திருப்பி கொண்டார். தன்னை ரசிகர்கள் கண்ணீருடன் பார்க்க வேண்டாம் என்பதே அவரது விருப்பமாக இருக்கலாம்
 
ஆனால் ஜூலியின் நிலையோ அதற்கு நேரெதிர். கிட்டத்தட்ட அவர் கேமிராவின் முன் அழுத முகத்தோடுதான் அதிக நேரம் காணப்படுகிறார் தன்னுடைய கண்ணீர் மக்களின் மத்தியில் அனுதாபத்தை பெறும் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் ஜூலியை பற்றி மக்கள் என்ன நினைத்துள்ளனர் என்பதை அவர் வெளியே வந்தவுடன் புரிந்து கொள்வார்

வெப்துனியாவைப் படிக்கவும்