முதல் பாதி டப்பிங்கை முடித்த சூர்யா

புதன், 8 நவம்பர் 2017 (10:49 IST)
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் பாதி டப்பிங்கை முடித்துள்ளார் சூர்யா.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ரம்யா கிருஷ்ணன், கார்த்தி, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு படம் ரிலீஸ்  என்பதால், வேகவேகமாக முடித்து சென்சாருக்கு அனுப்பும் பரபரப்பில் உள்ளனர்.இந்நிலையில், முதல் பாதி வரை தன்னுடைய  டப்பிங்கைப் பேசி முடித்துள்ளார் சூர்யா. இந்த வாரத்தில் இரண்டாம் பாதியையும் பேசிவிடுவார் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்