கங்கனா ரணாவத் செயலால் இயக்குனர் அதிர்ச்சி

திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:09 IST)
கிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள மணிகர்ணிகா படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் கிரிஷ் மற்றும் நடிகை கங்கனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.



படத்தில் சில காட்சிகளை மீண்டும் படமாக்கும்படி கிரிஷை அணுகியுள்ளார் கங்கனா. ஆனால் கிரிஷ் மறுத்ததால் அவரே சில காட்சிகளை எடுத்து விட்டு, இயக்குனர் என தன் பெயரை கங்கனா போட்டு கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரிஷ் கடும் கோபத்தில் உள்ளார்.  “மணிகர்னிகா படத்தை முழுமையாக எடுத்து முடித்து விட்டேன். சில காட்சிகளை மட்டும் படமாக்கி விட்டு, படத்தில் இயக்குனர் என்று பெயரை போட்டுக்கொள்ள கங்கனாவுக்கு தகுதி இல்லை” என்றார்.
 
இதற்கு கங்கனா ரணாவத் பதில் அளித்து பேசுகையில்,
“எதிர்பாராத விதமாக மணிகர்னிகா படத்தை நானும் இயக்க வேண்டி வந்தது. படத்தின் முக்கிய முடிவுகளை நான்தான் எடுத்தேன். கிரிசஷ்க்கு உரிய மரியாதையை கொடுத்துள்ளோம். இந்த படம் மீது அவருக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் தயாரிப்பாளரிடம் சொல்ல வேண்டும். மாறாக என்மீது குற்றம் சாட்டி பேசுவது முறையல்ல. இந்த படத்துக்கு பிறகு எனக்கும் படங்கள் இயக்கும் தகுதி வந்துள்ளது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்