ராதிகாவுக்காக சன்டிவி எடுத்த அதிரடி முடிவு

திங்கள், 10 டிசம்பர் 2018 (17:31 IST)
சன் டிவியில்   பல வருடங்களாக இரவு 9.30மணி சிலாட்டை ராதிகா கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ராதிகாவின் சீரியல்கள் அனைத்தும்  இரவு 9.30  முதல் 10 மணி வரை ஒளிபரப்பு ஆகிறது.


 
தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம்  ராதிகா சரத்குமார் பல சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வாணி ராணி சீரியல் முடிவுக்கு வந்தது. உடனே அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார் ராதிகா. சந்திரமுகி என்ற பெயரில் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இந்த சீரியலுக்கான புரொமோக்கள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக இந்த சீரியலின் அறிமுகத்திற்காக 1 மணி நேரம் ஒளிபரப்ப உள்ளார்கள். சன் டிவி,  ஒரு சீரியலுக்காக 1 மணிநேரம் கொடுப்பது இதுவே முதன்முறை என ராதிகா. இது தொடர்பாக டுவிட்டரில் அவரே பதிவு செய்துள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்
 

Today mega episode of #Chandrakumari 9.30 to 10.30pm.
First time @SunTV to do a 1hr episode for the launch

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்