முழு கதை உருவாக்க தெரியாமல் திணறும் வெங்கட் பிரபு - ட்ராப் ஆகுமா தளபதி 68?

வியாழன், 6 ஜூலை 2023 (11:06 IST)
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய்யிடம் கூறிய ஒன் லைன் முழு திரைக்கதையாக உருவாக்க வெங்கட் பிரபு மற்றும் அவருடைய துணை இயக்குனர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறதாம். இதனால் என்ன செய்வது என அவர்கள் குழம்பி போய் இருக்கிறார்களாம். 
 
இதையடுத்து தீர்க்கமான ஒரு முடிவெடுத்துள்ள வெங்கட் பிரபு, ஒருவேளை இப்படத்தின் திரைக்கதை சரியாக வரவில்லை என்றால், வெளியே இருந்து புதிய கதையை வாங்கி விஜய்யை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு விஜய் ஒப்புக்கொள்வாரா? என பயந்து போய் இருக்கிறதாம் படக்குழு. பெரிய ஹீரோவை ஒப்பந்தம் செய்துவிட்டு இப்படியா பொறுப்பில்லாமல் வேலை செய்வது என வெங்கட் பிரபுவை பலர் திட்டித்தீர்த்துள்ளனர். இப்படிதான் அஜித்தின்  62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்