’தளபதி விஜய் பயிலகம்’: நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடக்கம்..!

வெள்ளி, 14 ஜூலை 2023 (07:30 IST)
நாளை முதல் தமிழகம் முழுவதும் தளபதி விஜய் பயிலகம் என்ற இரவு பாடசாலை தொடங்க இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 
 
விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர பயிலகம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தளபதி விஜய் பயிலகம் என்ற இரவு பாடசாலை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார் 
 
இந்த பள்ளியில் பள்ளிக்கு செல்ல முடியாத ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி பயின்று கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் மற்றும் அவரது ரசிகர் மன்றத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்