தமிழ்ப்படம் 2.0 பார்த்த தயாரிப்பாளர் சோகம்

புதன், 20 ஜூன் 2018 (15:47 IST)
தமிழ்ப்படம் 2.0 படம் பார்த்த தயாரிப்பாளர் தலை மீது கைவைத்து சோகமாக இருப்பது போன்ற புகைப்படத்தை படத்தின் இயக்குனர் சி.எஸ். அமுதன் வெளியிட்டுள்ளார்.
 
சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்படம் 2.0. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் எல்லா தமிழ் திரைப்படங்களின் காட்சியை கேலி செய்து படமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோன்று இரண்டாம் பாகத்தில் பிரபலமான தமிழ் படங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி, விவேகம், மெர்சல், மங்காத்தா, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இரண்டாம் பாகத்தில் படங்களை கடந்து தமிழக அரசியல்வாதிகளையும், உலக அரசியல் தலைவர்களையும் கேலி செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் சி.எஸ். அமுதன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சி.எஸ் அமுதன் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தை தயாரிப்பாளர் பார்த்துவிட்டதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், படத்தின் தயாரிப்பாளர் தலை மீது கைவைத்து சோகமாக இருக்கிறார். இந்த புகைப்படம் படத்தின் புரோமோஷன்காக வெளியடப்பட்டது என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்