‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

vinoth

சனி, 21 செப்டம்பர் 2024 (09:18 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இந்த விழாவில் ரஜினியின் வழக்கம்போல அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக அமைந்தது.

இயக்குனர் ஞானவேல் பேசும்போது “இந்த மேடையில் நான் நிற்கக் காரணம் நடிகர் சூர்யாதான். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் ரஜினி சார் படங்களின் ஸ்டைல் மற்றும் எதாவது ஒரு காட்சி பிடிக்கும். எனக்கு அப்படி படையப்பா படத்தில் இடம்பெற்ற ஊஞ்சல் காட்சி மிகவும் பிடிக்கும். அதை வைத்துதான் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதினேன்.

எந்த நல்ல படம் வந்தாலும் ரஜினி சார் அழைத்துப் பேசுவார். ஜெய்பீம் வந்ததும் அவர் அழைப்புக்காக இரண்டு வாரம் காத்திருந்தேன். அவரைப் பார்க்க செல்ல புது சட்டை எல்லாம் எடுத்து சென்று பார்த்தேன். சில நாட்களுக்குப் பிறகு சௌந்தர்யாவிடம் இருந்து மெஸேஜ் வந்தது. அப்பாவுக்கு எதாவது கதை இருக்கிறதா என்று. என்னிடம் இரண்டு கதைகள் இருந்தன. அதில் எனக்கு மிகவும் பிடித்த கதைதான் வேட்டையன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்