முடிந்தது மாஸ், பாடல்கள் வெளியீட்டு வேலைகள் தீவிரம்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:25 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணித்தா, பார்த்திபன் நடித்திருக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
 
மாஸில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிககள் சில வாரங்கள் முன்பே முடிந்தது. அதனைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் 24 படத்தில் நடிக்கப் போனார் சூர்யா. மாஸின் பிற காட்சிகளை  சென்றவாரம் முடித்தார் வெங்கட்பிரபு. இந்த கடைசி நாள் படப்பிடிப்பில் வெங்கட்பிரபு, ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், ஸ்டண்ட் சில்வா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட்டு படத்தை மே 15 திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்