சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:18 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் இந்த படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இந்த படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்