ட்வீட் செய்யாமலே சூர்யாவுக்கு 13000 பாலோயர்கள்

திங்கள், 9 மார்ச் 2015 (09:30 IST)
சூர்யாவின் பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கி, அவருக்குப் பிரச்சனை தரும் கருத்துகளை சில விஷமிகள் வெளியிட்டதும், சூர்யா சைபர் க்ரைமில் புகார் தந்ததும் தமிழகம் அறிந்த செய்தி.
தனது பெயரில் கணக்கு தொடங்குகிறவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த சூர்யா, அவர்களை முறியடிக்க தானே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
 
இதுவரை அவர் எந்த ட்வீட்டும் செய்யவில்லை. அதற்குள் 13 ஆயிரம் பேர் அவரை பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில இது பல லட்சங்களாக உயரும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்