16 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்ரமணியபுரம்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

vinoth

வியாழன், 4 ஜூலை 2024 (16:09 IST)
2008 ஆம் ஜூலை 4 ஆம் தேதி சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது.

படத்தில் சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் நடிக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு இந்த திரைப்படம் ரி ரிலீஸானது.

இந்நிலையில் இன்று சுப்ரமணியபுரம் திரைப்படம் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து படத்தைப் பற்றிய நினைவுகளை ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் சசிகுமாரும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அந்த படத்தைப் பற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்